நெஞ்சம் கொஞ்சும்
நீவரும் போது
நிறையுது நெஞ்சம்
நீசொல்லக் கேட்க
உருகுது கொஞ்சம்
உன்னையே பாடிட
என்னையும் கெஞ்சும்
உருகியே பாடிட
என்னையும் கொஞ்சும்
நீதரும் நன்மையை
எண்ணிடச் சொல்லும்
நீடூடி வாழ்கென
வழ்த்திடச் சொல்லும்
நன்றியால் நிறைந்து
துதிக்கவும் சொல்லும்
நானுனைப் பாட
மகிழ்ச்சியில் துள்ளும்
திருவடி தரிசனம்
தேடியே ஓடும்
தினம்தோறும் அதையே
நாடி விழையும்
பெற்றபின் அதையே
சூடியும் கொள்ளும்
பிறந்ததின் பயனை
எண்ணியே மகிழும்
நேரம் காலம்
பார்ப்பதும் இல்லை
நினைவை உனைவிட்டு
நீக்குவ தில்லை
புறம்பாக ஆயிரம்
பணிசெய்த போதும்
புந்தியில் வைக்க
மறப்பதும் இல்லை
உன்னை என்னுள்ளே
எப்போதும் வைக்கும்
இதுபோன்ற நெஞ்சம்
எப்போதும் வேண்டும்
இறுதி வரையில்
உனையே எண்ணி
என்னை உன்னுள்ளே
கரைசேர வைக்கும்
குருகுலம், 20-10-2017, காலை 10.30