Quantcast
Channel: Dayanand Bharati
Viewing all articles
Browse latest Browse all 1918

Bhakti Songs 381-390

$
0
0

381 நினைக்க வேண்டும்

 

அலைமோதும் மனதுக்கோர் அமைதிவேண்டும்

அடங்காத மதிக்கும் ஓர் எல்லை வேண்டும்

நினைவாலும் மனதாலும் நாடவேண்டும்

நித்தம் உன்பாதமே நான் தொழவேண்டும்

 

கண்ணுக்குப் புறம்பாக நீ நின்றபோதும்

கருத்துக்கு எட்டாது ஆனபோதும்

உணர்வின் ஊடாக என்னுள் வந்து

ஒன்றாகி என்னையும் நிதம் ஆளவேண்டும்

 

சொன்னதைச் சொல்லியே வந்தபோதும்

ஒன்றும் சொல்லாமலே நான் நின்றபோதும்

சொல்லாமலே என்னை அறிந்த நீயும்

சொந்தமாக்கி உன்னுடன் வைக்கவேண்டும்

 

ஆரவாரம் மிகுந்த இவ் வுலகினிலே

அதனிடை வாழ்க்கையின் ஓட்டத்திலே

ஆயிரம் நெருக்கங்கள் சூழ்ந்திருந்தும்

அவற்றிடை உன்னையும் நினைக்க வேண்டும்

 

ஆயினும் நானுன்னை மறந்திட்டாலும்

அதற்கு காரணம் எதுவாயினும்

ஆதியில் நான்கொண்ட அன்பை எண்ணி

ஆட்கொண்டும் மீண்டும் @அருளவேண்டும்

 

31-1-16, மதியம் 2.55, மத்திகிரி

 

 

382 இன்பமயம்

 

எல்லாம் இன்பமயம்

உனைப்பாடி துகிக்கையிலே

உன்படைப்பை நினைக்கையிலே–எல்லாம்

 

விண்படைத்து மண்படைத்து

வெவ்வேறு கோள்படைத்து

விதவித உயிர்படைத்து

என்னையும் உடன்படைத்த–தெல்லாம்..

 

பகலென்றும் இரவென்றும்

பலவித நிலைப்படைத்து

பாங்குடன் வாழ்வதற்கு

விதிபல சமைத்த-தெல்லாம்

 

வாழ வழிகாட்ட

வகையாக நெறிதொக்குது

வாழ்ந்திடும் வாழ்க்கையில்

கடமையும் வகுத்த-தெல்லாம்

 

உன்வழி வாழ்வோர்க்கு

உன்னத நிலைதந்து

உன்வழி மறந்தோர்க்கு

நல்ல அறம்தந்த–தெல்லாம்

 

இத்தனை தந்தபின்னும்

எம்மையும் தருவதற்கு

பத்திஎன்ற ஒருநிலையை

பரிவுடன் அளித்த-தெல்லாம்

 

2-2-16, மதியம் 2.50 மத்திகிரி

 

 

383 முடிவில்லா முக்தி

 

முடிந்தது பயணம் புவியோடு

முடிவில்லா முக்தியை அடையும் போது

இனி பயம்நமக் கேது மில்லை

எரிநரகம் நாம் என்றும் சேர்வதில்லை

 

விட்டுச் சிலகாலம் பிரிந்தாலும்

மீண்டும் சந்தித்து மகிழ்ந்திருப்போம்

புவியின் பாடுக்கு முடிவு கண்டோம்

புதுவாழ்வில் புகுந்து மகிழ்வு கொள்வோம்

 

நமக்கு முன்னாகச் சென்றவரை

நாம்கண்டு ஆனந்தம் கொண்டிடுவோம்

நம்பின் வரப்போகும் பக்தருக்காய்

நாமும் ஆவலாய்க் காத்திருப்போம்

 

பெற்றோர் உற்றோர் துயருற்றாலும்

நம்பிரிவைத் தாளாமல் கணீர்விட்டாலும்

நம் பக்திக் கண்டு அவர்களுமே

நாதனுக் கென்றும் நன்றி சொல்வார்

 

நம்மையும் மீண்டும் பார்க்க வேண்டி

நாளும் பக்தியில் வாழ்ந்திருப்பார்

தம் ஓட்டம் ஒடி முடித்தபின்னே

நம்முடன் வந்து சேர்ந்து கொள்வார்

 

ஆகையால் ஆனந்தம் கொண்டாடிடுவோம்

ஆரவாரம் செய்து பாடிடுவோம்

இந்த நம்பிக்கை பிறரும் பெற

இறைவனை வேண்டிக் கேட்டிடுவோம்

 

4-2-2015, காலை, 10.30, மத்திகிரி

 

 

384 உணர்ந்தும் உணராதவர்

 

உணர்ந்து கொள்ள வில்லை

உன்னை புரிந்து கொள்ளவில்லை

உன்னுடன் வாழ்ந்த போதும்

உனையீன் றெடுத்த போதும்

 

பழகப் பழக புளிக்கும்

பாலும் என்ப துண்மை

பழகி அறிய மறுத்ததால்

பாவம் அவர்தம் நிலமை

 

சொந்தம் அவர்க்காய் ஆனாய்

சொல்லில் செயலில் வாழ்ந்தாய்

எதனைச் செய்த பின்னும்

ஏது ரைத்த போதும்

 

ஆனால் உடன்நீ சென்று

அவர்க்கு அடிமை கொண்டு

அவர்தம் தயவில் வாழ்ந்து

அருளில் பெருகி உயர்ந்தாய்

 

அவரைப் போல ஆனோம்

நீஅறிந்து மீட்ட போதும்

அறியா திருந்தால் நன்மை

அறிந்தும் மறுத்தால் கொடுமை

 

உணர்ந்தும் உணரா எம்மை

உணர்த்தி காப்பதுன் கடமை

அந்து துணிவால் மீண்டும்

அண்டி வந்தோம் அருளும்

 

8-2-16, மத்திகிரி, காலை 5.45

 

385 அஞ்சமாட்டேன்

 

என்னவோ மீட்டெடுத்தாய்

எனக்குமோர் வாழ்வளித்தாய்

அந்த ஒன்றைமட்டும் எண்ணி

ஆனந்தம் கொண்டிடு வேன்

 

என்னைக் கேட்டு மீட்கவில்லை

என்நீசம் பார்க்க வில்லை

உன் கருணை ஒன்றினாலே

என்னை நீ ஆட்கொண்டாய்

 

அதற்கு நானும் உடன்பட்டேன்

அறிந்து கொள்ள செயல்பட்டேன்

எந்தவரை இணங்கினேனோ

அந்தவரை அறிந்து கொண்டேன்

 

பொறுமை நீயும் காதுநின்றாய்

பிழைபலப் பொறுத்துக் கொண்டாய்

என்னைத் தந்து உன்னில்வாழ

ஏற்ற வழிகாட்டி வந்தாய்

 

போகும் தூரம் மிகவிருந்தும்

போராட்டம் பல இருந்தும்

இலக்கு நீயாய் இருப்பதாலே

எதனைக் கண்டும் அஞ்சமாட்டேன்

 

மீட்ட நீயே உடனிருந்து

சேர்க்க வேண்டி முன்நடந்து

ஏற்ற வழி காட்டும்போது

என்ன வேண்டும் இனியெனக்கு?

 

உன்னை முன்னி றுத்தி

உன்னில் எனை நிறுத்தி

அந்த ஒருபெலத்தி னாலே

அன்றாடம் வாழ்கின்றேன்

 

8-2-16, மத்திகிரி, காலை 6.15

 


Viewing all articles
Browse latest Browse all 1918

Trending Articles