இதுஎன் குணம்
இரக்கத்தை அறியேன்
இங்கிதம் அறியேன்
இன்சொல் ஒன்று
பேசிட அறியேன்
எதற் கெடுத்தாலும்
வாதம் செய்வேன்
எடுத்துச் சொன்னாலும்
கேட்க மறுப்பேன்
பணிவு அறியேன்
பண்பும் அறியேன்
பாசம் நேசம்
கொண்டிட அறியேன்
தானென்னும் எண்ணம்
தலைக்கு ஏற
தர்க்கங்கள் செய்து
வெல்ல முயல்வேன்
இதுபோல் எனது
குணத்தைச் சொல்ல
எண்களும் போதாது
எண்ணியே காட்ட
ஆனாலும் என்மீது
நீகொண்ட பரிவால்
அனைத்தும் அறிந்தும்
ஆட்கொண்டு உய்த்தாய்
அதைமட்டும் நாள்தோறும்
அடிமை எண்ணி
உளமாற உனைப்போற்றி
உன்னடிப் பணிகிறேன்
மத்திகிரி, 20-9-2017, மாலை, 5.30