பழிவாங்குதல்
பழிவாங்கத் தேவை
கடவுளுக் கில்லை
பழிவாங்க அவனும்
படைக்கவும் இல்லை
நம்பாவம் நம்மைத்
தொடர்ந்து பிடிக்கையில்
பழிவாங்க ஒருவன்
தேவையே இல்லை
நாம்செய்யும் தவறுக்கு
நாமன்றோ காரணம்
நமக்கது புரிந்தாலும்
ஏற்கத்தான் காணோம்
நமக்குள்ளே நாம்கொண்ட
பேதங்கள் ஆயிரம்
அதற்காக அவன்மீது
ஏன்குறை சொல்லணும்
தவறுக்குத் தண்டனை
நிச்சயம் உண்டு
யாராதைத் தருவது
எனும்கேள்வி கொண்டு
அதற்கானத் தீர்ப்பையும்
தாங்களே கண்டு
அதனை நிறைவேற்ற
முனைந்திடும் போது
மவுனமாய் மனசாட்சி
நம்மிடம் பேசும்
எவர்தந்த உரிமை
என்றுமே கேட்கும்
குற்றம் அற்றவன்
எரியட்டும் கல்லை
என்றுமே கல்லையும்
நம்மிடம் கொடுக்கும்
கொடுத்த கல்லுமோ
கைதளர வீழ்ந்தது
நம்காலை முதலிலே
பதமுமே பார்த்தது
நாமே நம்மை
பழிவாங்கிக் கொண்டபின்
எவரை குறைசொல்ல
எனும்கேவி எழுந்தது
குருகுலம், 26-9-2017, காலை. 11.10