பணிவது எதற்கு
அறியாமல் இருந்தாலும்
அறிந்துனைத் தொழுதாலும்
அனைத்து உயிர்களும்
உனக்கே சொந்தம்
அறியாமல் இருந்தேன்
அறிந்துமே கொண்டேன்
அதனால் ஐயனே
அனுதினம் தொழுகிறேன்
அறியமனம் தந்தாய்
அறிந்திடும்வரம் தந்தாய்
அதனால் உன்னைப்
புரிந்துமே பணிகிறேன்
அறிய விழைவோருக்கு
அருகினில் இருக்கிறாய்
அழைத்தால் குரல்கேட்டு
ஓடியே வருகிறாய்
அறிய மனமின்றி
அறிந்திடும் திறனின்றி
அலைந்திடும் மனிதரை
பொறுத்துமே அருள்கின்றாய்
அறிந்தாலும் அதன்படி
வாழ இயலோர்க்கு*
(*இயலாதவர்களுக்கு)
அதனினும் அதிகம்
அருளை அளிக்கின்றாய்
அறிந்தும் அறியாத
அறிவிலி எனக்கோ
உன்னையே தந்து
ஐயனே மகிழ்கின்றாய்
அறிவேன் அறியேன்
அதற்காகக் கலங்கேன்
அடிமையை மீட்டாய்
அதைமட்டும் அறிந்தேன்
அதுபோதும் எனக்கு
அறிந்ததும் எதற்கு
அனுதினம் உன்னடி
பணிவது அதற்கு
குருகுலம், 25-9-2017 காலை 5.15