அதனால் பாடுவேன்
பாடினால் பரவசம்
பாடுவேன் அவசியம்
பதம்தந்து மீட்டாய்
அதுவன்றோ அதிசயம்
பாடப் பாட
பக்தியும் பெருகுது
பக்தியும் பெருகிட
பாடலும் வருகுது
பாடலின் பொருளானாய்
பாடவரம் தந்தாய்
பாடியே தொழும்போது
மகிழ்ந்துமே வருகின்றாய்
பாட்டென்னும் பாமாலை
பலவிதம் புனைந்துனை
பாடியே பரவுதல்
பக்திக்கு அழகன்றோ
பலவிதப் பொருள்கொண்டு
பலவிதம் தொழுதாலும்
பாடல் ஒன்றுக்கு
அவையும் இணையாமோ
பலர்கூடி வேண்டினும்
பலசொல்லிப் போற்றினும்
பாடியே துதிக்காமல்
பக்திக்கு நிறைவுண்டோ
பக்தியை விளக்கிட
உரைபல சமைத்தாலும்
பாடலின் எளிமை
அவற்றுக்கும் வருமோ
பாட்டென்னும் மொழியோடு
பக்தியின் துணையோடு
பக்தரின் சபையோடு
பாடஉன் அருளுண்டு
குருகுலம், 25-9-2017, காலை. 6.00