கற்பனையா
எழுதுவ தெல்லாம் அனுபவம் தானா
என்வாழ்வில் இவை நடந்தவை தானா
இதயத்தில் வந்த கற்பனைகளையே
எழுத்திலே வடித்து தண்துவிட்டேனா
சிறு பொறியாக வந்த எண்ணத்தை
சிறகுகள் கட்டி பறக்க விட்டேனா
சிந்தையில் தோன்றிய கற்பனைகளுக்கு
வண்ணங்கள் பூசி உலவ விட்டேனா
அன்பு, அடக்க, பண்பு, பணிவு
ஆத்திரம், கோபம், எரிச்சல், வெறுப்பு
இன்னும் பலவித குணங்கள் எல்லாம்
உண்மையில் உன்னிடம் காட்டிவிட்டேனா
இவைகளை எல்லாம் கற்பனை செய்து
எனக்குள்ளாக நானே பேசி
உன்னுடன் பேசுறேன் என்றுமே எண்ணி
உண்மையில் என்னையே ஏய்த்துக் கொனண்டேனா
உறுதியாய் எனக்குத் தெரியவும் இல்லை
உண்மை எதுவெனப் புரியவும் இல்லை
பிறருக்குக் கூற ஏதுமே இல்லை
பிறர்அதை நம்ப்பிடத் தேவையும் இல்லை
எனக்கும் உனக்கும் உள்ள உறவை
எவருக்கும் சொல்லிடத் தேவையும் இல்லை
எழுத்தில் எழுதிக் காட்டுவதெல்லாம்
என்றும் முழுதாய் இருப்பதும் இல்லை
குருகுலம், 14-10-2017, 11.30