உள்ளான உணர்வோடு
எனக்குள்ளே ஆழ்ந்து
என்னையும் மறந்து
என்சிந்தை தன்னையே
உனக்குள் வைத்து
நீபேச நான்கேட்க
மனச்செவி திறந்து
நீபெசும் மொழியினை
நானுமே புரிந்து
உள்ளான உணர்வோடு
உவகைப் பெருக்காலே
உன்வேத வாக்காலே
நீசொல்லக் கேட்டு
உணர்ந்திடும் ஒன்றை
கற்பனை என்று
எப்படி ஏற்றக
என்மனம் மறுக்குது
மனதுக்கும் மூளைக்கும்
இடமுமே உண்டு
உள்ளமும் இதனை
உணர்ந்திடும் நன்று
ஆயினும் அவற்றுக்கு
எல்லையும் உண்டு
அவற்றுக்கு அப்பாலே
உறவாடிக் கொண்டு
ஆவியில் அதையும்
புரிந்து கொண்டு
ஆனந்தம் காண்பது
பக்திக்கு உண்டு
குருகுலம், 15-10-2017, காலை 11.10