யாரும் சொல்ல வேண்டாம்
பிறர்வந்து கூறிடத் தேவையே இல்லை
புதிதாகக் கூறிட ஏதுமே இல்லை
என்மன ஓட்டத்தை அறிந்த எனக்கு
இனியொன்று கூறிடத் தேவையே இல்லை
சஞ்சலம் எனக்கு சொந்தமும் ஆச்சு
சந்தேகப் படுவது என் பழக்கமாச்சு
நிலையில்லா புத்தி நிலையாகிப் போச்சு
நொடியிலே மாறுதல் வழக்கமும் ஆச்சு
இளகியமனசு சற்று இருந்த போதும்
எளிதில் இரங்கி உதவிட மாட்டேன்
உதவிட உள்ளமும் விரும்பிய போதும்
உதவிட மறுக்க காரணம் தேடுவேன்
கருமித்த் தனத்தை காட்ட மறுத்து
எளிமை என்ற போர்வைக்குள் மறைவேன்
காசு-பணம் என்னும் போது
கருத்தாய் கணக்கு அதிகம் பார்ப்பேன்
மெத்த படித்த மேதை என்று
என்னை நானே எண்ணிக் கொண்டு
உளறி கொட்டி, கிளறி மூடி
உருப்படாமல் எழுதி வைப்பேன்
போகும் நேரம் நெருங்கும் போது
புத்தி வந்து பயனும் என்ன
ஏதோ இரங்கி நீயும் மீட்டாய்
அதனை புரிந்து வாழ்ந்திருக்கேன்
குருகுலம், 16-10-2017, காலை 11.10